அழிவின் விழிம்பில் இருக்கும் சிட்டுக் குருவிகளை பாதுகாக்கும் ஆசிரியர்..!

0 1853

கரூரில் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், அழிவின் விழிம்பில் உள்ள சிட்டுக்குருவிகளுக்கு தானியங்கள் வழங்கி வருவதுடன், இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக மண் பானைகள் வைத்தும் பாதுகாத்து வருகிறார்.

செல்லாண்டிபாளையத்தை சேர்ந்த ஆசிரியர் ராஜசேகரன் என்பவர்,  சமையலறையில் சிட்டுக்குருவி கூடு கட்டி அடை காப்பதை கண்டு,  சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கம் செய்ய வசதியாக மண் பானைகளை வாங்கி வீட்டை சுற்றிலும் கட்டி தொங்கவிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் குறைவான எண்ணிக்கையில் சிட்டுக்குருவிகள் வந்த நிலையில், தற்போது 400-க்கும் மேற்பட்ட சிட்டுக் குருவிகள் வருகின்றன.

இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து, சிட்டுக் குருவிகளை பாதுகாக்க ஆசிரியர் ராஜசேகரன் எடுத்து வரும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments