பிளாஸ்டிக் பையில் சுற்றி ஆட்டோவில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு..!

0 2014

சென்னை அருகே பச்சிளம் குழந்தையை பிளாஸ்டிக் பையில் சுற்றி ஆட்டோவில் விட்டுச் சென்ற பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செங்குன்றம் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் காதர் என்பவரின் ஆட்டோவில் கைக்குழந்தையுடன் ஏறிய இளம்பெண் ஒருவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கினார்.

அவரை இறக்கிவிட்டு திரும்பியபோது ஆட்டோவில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. உடனடியாக காதர் பார்த்தபோது, பிளாஸ்டிக் பையில் பச்சிளம் பெண் குழந்தை இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுநர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் போலீசார், குழந்தையை மீட்டு முதலுதவி அளித்து, தி.நகரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments