சென்னையில் 1 லட்சம் செலுத்தினால் மாதம் 10 ஆயிரம் தருவதாக கூறி சுமார் ரூ.200 கோடி மோசடி..!
சென்னை கோடம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த ஆம்ரோ கிங்ஸ் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம், ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால், மாதம் 10 ஆயிரம் தருவதாக கூறி, வாடிக்கையாளர்களிடமிருந்து சுமார் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக,
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராஜராஜன் - முத்துலட்சுமி தம்பதி, கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனத்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, வழக்கு பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
Comments