கடலில் குளித்துக் கொண்டிருந்த 2 மாணவர்கள் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயம்.. தேடும் பணி தீவிரம்..!

0 2396

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே, கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான இரண்டு பள்ளி மாணவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி கருவாடிக்குப்பம் பகுதியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 6 பேர் பெரிய முதலியார் சாவடி பகுதியில் உள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது தீபன் மற்றும் சண்முகம் ஆகிய இரண்டு மாணவர்கள் அலையில் இழுத்துச்செல்லப்பட்டனர்.

அருகில் இருந்த மீனவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்..

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments