கூட்டுறவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் மீது வேன் மோதி விபத்து..!

0 3244

சென்னை பட்டினப்பாக்கத்தில் சுனாமி நினைவு நாளையொட்டி, அஞ்சலி செலுத்துவதற்காக கூட்டுறவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்துக்குள்ளானது.

பட்டினப்பாக்கம் இணைப்புச் சாலையில் வந்த போது, எதிரே வந்த டூரிஸ்ட் வேன், எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், ராதாகிருஷ்ணனும் ஓட்டுநரும் காயமின்றி தப்பினர்.

அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், ராதாகிருஷ்ணன் காரில் இருந்து இறங்கி போக்குவரத்தை சரி செய்தார்.

பின்னர், நொச்சிக்குப்பம் மீனவ மக்களுடன் சேர்ந்து சுனாமியால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய ராதாகிருஷ்ணன், மயிலாப்பூர் எம்.எல்.ஏவின் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments