அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மீது குடிபோதையில் இருந்த 3 இளைஞர்கள் தாக்குதல்..!

0 1464

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனரை குடிபோதையில் தாக்கிய 3பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆதிவராக நல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே பாண்டிச்சேரியில் இருந்து சிதம்பரம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது மதுபோதையில் வந்த 3 பேர் பேருந்துக்கு வழிவிடாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதால், ஓட்டுநர் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த இளைஞர்கள் பேருந்தை வழிமறித்து நடத்துனர் மற்றும் ஓட்டுனரை  அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து தாக்கியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments