பிரதமர் மோடியின் ஆட்சியில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை - சுதாகர் ரெட்டி

0 2076

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் 98வது பிறந்த நாளான இன்று சென்னை தியாகராயா நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், வாஜ்பாயின் படத்திற்கு தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுதாகர் ரெட்டி, சுயசார்பு இந்தியாவை செயல்படுத்தி வரும் பிரதமர் மோடியின் ஆட்சியில் ஊழல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவே பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, 27ஆம் தேதி தமிழகம் வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments