முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 98-வது பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

0 1806

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98-வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, இந்தியாவிற்கு வாஜ்பாய் அளித்த பங்களிப்பு அழிக்க முடியாதது என்று குறிப்பிட்டுள்ளார். வாஜ்பாயின் தலைமையும், தொலை நோக்கு பார்வையும் மில்லியன் கணக்கான மக்களை ஊக்குவிப்பதகாவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments