சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை..!
தந்தை பெரியாரின் 49வது நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அதனையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் உருவச்சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சருடன் இணைந்து அமைச்சர்கள் துரைமுருகன், ஏ.வ.வேலு, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் பெரியார் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
Comments