ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு சொந்த ஊர் திரும்பியபோது நொடியில் நடந்த கோரா விபத்து..!

0 3260

தேனி மாவட்டம் குமுளி மலைச்சாலையில் ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய  ஐயப்ப பக்தர்களின் வாகனம்  பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். 

ஆண்டிபட்டியில்  இருந்து பத்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்துவிட்டு திரும்பியுள்ளனர்.அப்போது அவர்கள் வாகனம் குமுளி மலைப்பாதையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து  சாலையோரம் இருந்த 40 அடி பள்ளத்தில் பாய்ந்த்து.

இதில் சம்பவ இடத்தில் 7பேரும் மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து  தகவல் அறிந்த தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுபவர்களுக்கு  ஆறுதல் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments