"ஹெல்மெட் அணியாமல், வாகனத்தில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” - டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

0 1490

'ஹெல்மெட்' அணியாமல், இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்துசெல்வோர், 'ஹெல்மெட்' அணிவது கட்டாயம் என்பதால்,மீறுவோருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய போலீசாரில் பலர், ஹெல்மெட் அணிவது இல்லை என தெரியவந்துள்ளதால், ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வரும் போலீசாரிடம், வாகனத்தை பறிமுதல் செய்யுமாறு, டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், 'போலீஸ்' என்ற அடையாளத்தை காரணமாக கூறி, வாக்குவாதம் செய்வோர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments