தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா இன்று கோலாகலம்..!

0 2430

தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மார்கழி மாதம் அமாவாசை மூலநட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் அவதரித்த நாளான இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

ஆஞ்சநேய பக்தர்கள் விரதம் இருந்து வடைமாலை, துளசி மாலை , வெற்றிலை மாலை சாத்தி அனுமனை வழிபடுவது வழக்கம்.

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல்லில் உள்ள விஷ்வரூப ஆஞ்சநேயர் கோவில் பல்வேறு வண்ணங்களில் 2 டன்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. ஒரு லட்சத்து 8 வடைகள் கோர்க்கப்பட்ட மாலை ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அனுமனை தரிசனம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments