பொங்கல் பரிசு தொகை ரூ.1000 - தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

0 3359

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுடன், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும், இதனால் 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைத்தாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி 2ஆம் தேதியன்று பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments