தொழிலதிபரின் மகள்களை கடத்திச்சென்று 50 லட்சம் ரூபாய் பறித்த 10 பேருக்கு ஆயுள் தண்டனை!

0 1909

மதுரையில் பிரபல தொழிலதிபரின் மகள்களை கடத்திச்சென்று 50 லட்சம் ரூபாய் பறித்த 10 பேருக்கு, அம்மாவட்ட மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு, தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த கார்த்திகை செல்வம் என்பவரின் 2 மகள்கள், பள்ளி முடிந்து, காரில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, போலீஸ் வேடமிட்டு வந்த கும்பல், அந்த காரை வழிமறித்து சோதனையிட்டனர்.

ஆவணங்களில் குழப்பம் இருப்பதால் தங்களை பின் தொடர்ந்து வருமாறு கூறி, அழைத்துச்சென்ற அந்த கும்பல், கார் ஓட்டுநர் பாண்டியை தாக்கி, அவருக்கு மயக்க மருந்து செலுத்தி விட்டு, குழந்தைகளை கடத்திச்சென்றனர். அவர்கள், 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய நிலையில், பணத்தை கொடுத்து, தந்தை கார்த்திகை செல்வம் குழந்தைகளை மீட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார், அதே பகுதியை சேர்ந்த ஜீவிதா, கண்ணன், வைரமுத்து உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 10 பேரை குற்றவாளிகள் என உறுதி செய்து, ஆயுள் தண்டனை விதித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments