பெண்ணின் கண்பார்வை பறிபோன விவகாரம்-திருவாரூர் கல்லூரி முதல்வரின் அறைக்கு சீல் வைக்க உத்தரவு

0 1732

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணின் கண்பார்வை பறிபோன விவகாரத்தில் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் இழப்பீடு வழங்காததால் கல்லூரி முதல்வரின் அறைக்கு சீல் வைக்க திருவாரூர் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2013ம் ஆண்டு இம்மருத்துவமனையில் வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட விஜயகுமாரி என்ற பெண்ணுக்கு கண் பார்வை பறிபோனதால், இழப்பீடு வழங்கக்கோரி அவரது கணவர் வழக்கு தொடர்ந்தார். மருத்துவரின் அலட்சியத்தால் கண்பார்வை பாதிக்கப்பட்டதாக கூறிய நீதிமன்றம், விஜயகுமாரிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருந்தது.

அந்த இழப்பீடு தொகையை வழங்காததால் மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்திற்கு சீல் வைக்க நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்த நிலையில், அதிகாரிகள் சீல் வைக்க சென்றனர்.  இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறியதால் அவர்கள் திரும்பிச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments