ஈஷா மையத்திற்கு யோகா பயிற்சி பெற வந்து மாயமான பெண்.. 6 ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படையை அமைத்து பெண்ணை தேடும் போலீசார்!

0 4384

கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்திற்கு யோகா பயிற்சி பெற வந்து காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்க ஆறு ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூரை சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் சில நாட்களுக்கு முன் ஈஷா மையத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 18ஆம் தேதி பயிற்சி முடியவிருந்த நிலையில் அதற்கு முன்னதாகவே அவர் அங்கிருந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுபஸ்ரீ வெளியே ஓடிச்செல்லும் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை துவக்கியுள்ள நிலையில், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களுக்கு அவரது புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டு, வாட்ஸ்அப் மூலமும் படங்கள் மற்றும் செல்போன் எண்கள் பகிரப்பட்டு வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments