சாலையோரத்தடுப்பில் மோதிய காரின் பின்கதவு திறந்ததால் சாலையில் விழுந்த பெண் பலி..!
சென்னை பள்ளிக்கரணையில், சாலையோரத்தடுப்பில் மோதி கார் விபத்துக்குள்ளானதில், 23 வயதான பெண் ஐ.டி ஊழியர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பொள்ளாச்சியை சேர்ந்த கிருத்திகா, விடுதியில் தங்கியபடி OMR சாலையிலுள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
அலுவலக நண்பர்கள் 3 பேருடன் சென்னையை சுற்றிப்பார்க்க, ஹோண்டா சிட்டி காரில் அவர் சென்றபோது, பள்ளிக்கரணை குப்பைமேடு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில், காரின் பின்கதவு திறந்த நிலையில், சாலையில் விழுந்த கிருத்திகா, சம்பவ இடத்திலேயே பலியானார்.
Comments