சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் நின்ற சிறுவர்கள் மீது மோதி விபத்து..!

0 1407

டெல்லியின் குலாபி பாக் பகுதியில் இன்று வேகமாக சென்ற கார், சாலையோர நடைபாதையில் நின்றிருந்த, 10 வயதிற்குட்பட்ட 3 சிறுவர்கள் மீது மோதிய காட்சி, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சாலையில் வந்துகொண்டிருந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நடைபாதையில் ஏறியது. 

3 சிறுவர்கள் மீது கார் மோதியதில், ஒரு சிறுவன் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

விபத்து தொடர்பாக 30 வயதான கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments