சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் நின்ற சிறுவர்கள் மீது மோதி விபத்து..!
டெல்லியின் குலாபி பாக் பகுதியில் இன்று வேகமாக சென்ற கார், சாலையோர நடைபாதையில் நின்றிருந்த, 10 வயதிற்குட்பட்ட 3 சிறுவர்கள் மீது மோதிய காட்சி, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சாலையில் வந்துகொண்டிருந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நடைபாதையில் ஏறியது.
3 சிறுவர்கள் மீது கார் மோதியதில், ஒரு சிறுவன் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
விபத்து தொடர்பாக 30 வயதான கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
Comments