உக்ரைனில் தீவிரமடைந்த போர்.. போரைக் குறிக்கும் வகையிலான கிறிஸ்துமஸ் மரத்தை அமைத்த உக்ரைனியர்கள்

0 1542

கிறிஸ்துமஸ் சீசன் தொடங்கியுள்ள நிலையில், உக்ரைனின் மைகோலைவ் நகரில், போரைக் குறிக்கும் வகையிலான கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.

போர் காலங்களில், தாமும் தமது தளவாடங்களும் பிறர் கண்ணில் படாதவாறு செய்யப் படைவீரர்கள் உருமறைப்பு வலைகளை பயன்படுத்துவர்.

அந்த உருமறைப்பு வலைகளை தயாரித்து கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கியுள்ள மைகோலைவ் நகர மக்கள், பண்டிகை முடிந்ததும் இவை ரஷ்ய படைகளை எதிர்த்து போரிடும் உக்ரைன் வீரர்களுக்கு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments