''கல்வான், தவாங்கில் இந்திய ராணுவ வீரர்கள் தங்களது வீரத்தை வெளிப்படுத்தினர்'' - ராஜ்நாத் சிங்!

0 1278

கல்வான் மற்றும் தவாங் எல்லையில் இந்திய ராணுவம் வெளிப்படுத்திய தைரியத்தையும், வீரத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் போதாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், எதிர்க்கட்சியில் உள்ள எந்த தலைவரின் நோக்கத்தையும் தாங்கள் கேள்வி கேட்கவில்லை என்றும் பொய்யை மட்டும் வைத்து நீண்ட காலம் அரசியல் செய்ய முடியாது என்றும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்தார்.

மேலும், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments