பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்த பாக். அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு கடும்கண்டனம்..!

0 2226

பிரதமர் மோடியை விமர்சித்த பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் ஐநா.பாதுகாப்பு சபை கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ஒசாமா பின்லேடன் போன்ற தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தானுக்கு ஐநா.வில் இடமில்லை என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதனையடுத்து பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்த பாகிஸ்தான் அமைச்சரின் கருத்துகள் அநாகரீகமானவை என்று வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் பாகிஸ்தான் தூதரகம் முன்பாக பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments