5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டன - மத்திய அரசு

0 1461

கடந்த 5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக செலுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்த கேள்விக்கு மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், 2018ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் செயற்கைக்கோள்கள், பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி-எம்கே3 ராக்கெட்டுகள் மூலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக கூறினார்.

மேலும், செயற்கைக்கோள்கள் மூலம் 94 மில்லியன் அமெரிக்க டாலரும், 46 மில்லியன் யூரோவும் அந்நியச் செலாவணியாக இந்தியாவுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments