மீனவர்களின் வலையில் சிக்கிய அரியவகை டால்பினை மீண்டும் பாதுகாப்பாக கடலில் விட்ட மீனவர்கள்

0 2495

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய அரியவகை டால்பின் மீன் மீண்டும் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டது.

வாலிநோக்கம் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது மீனவர் ஒருவரின் வலையில் சுமார் 4 வயதுடைய 50 கிலோ எடையுடைய டால்பின் மீன் சிக்கியுள்ளது. இதையடுத்து மீனவர்கள் அதனை மீண்டும் பாதுகாப்பாக கடலுக்குள் விட்டனர்.

தகவல் அறிந்து அங்கு விரைந்த கீழக்கரை வனச்சரக அலுவலர் கனகராஜ் உள்ளிட்ட வனத்துறையினர் மீனவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இதே பகுதியில் கடந்த 20 நாட்களில் மீனவர்களின் வலையில் சிக்கிய மூன்று டால்பின் மீன்கள் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments