தமிழ்நாட்டில் பீச் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப்போட்டிகளை நடத்த முயற்சி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

0 1670

செஸ் ஒலிம்பியாட் போன்று, தமிழ்நாட்டில் பீச் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப்போட்டியையும் நடத்த, முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆந்திராவின் குண்டூரில் நடைபெறும், தேசிய அளவிலான உண்டு - உறைவிட பள்ளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகளில், தமிழ்நாடு சார்பில் பங்கேற்கும் மாணவ - மாணவிகளுடன், அமைச்சர் கலந்துரையாடினார்.

பின்னர் பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் தங்கக்கோப்பை போட்டிகள், ஜனவரி மாதம் தொடங்கவுள்ள நிலையில், அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது தொடர்பான கோரிக்கை குறித்து, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments