ஏசி அறையில் ஏற்பட்ட மின்கசிவால் தொழிலதிபர் உடல் கருகி உயிரிழப்பு..!

0 9361

சென்னை சூளைமேடு பகுதியில், வீட்டில் ஏசி மின்கசிவால் விபத்து நேரிட்டு, தொழிலதிபர் உடல் கருகி உயிரிழந்தது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டுமான தொழில் செய்யும் சுரேஷ்குமாரின் மருமகள் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அங்கேயே தங்கியதாக கூறப்படுகிறது.

சுரேஷ்குமார் மட்டும் வீட்டில் ஏசி அறையில் தனியாக தூங்கிய நிலையில், இன்று காலை வீட்டிலிருந்து புகை வரவே, அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் எரிந்திருந்த நிலையில், சுரேஷ்குமார் உடல் கருகி சடலமாக கிடந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments