நர்சிங் கல்லூரியின் விதிமீறலை சரிசெய்ய ரூ.35 லட்சம் லஞ்சம் கேட்டதாக புகார்.. தணிக்கைத்துறை இயக்குனர் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு!

0 1512

தனியார் மருத்துவமனை நர்சிங் கல்லூரியிடம் 35 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட வழக்கில், மத்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவைத்துறை இயக்குனருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையில் உள்ள நர்சிங் கல்லூரியின் விதிமீறலை சரிசெய்ய தணிக்கைத்துறை இயக்குனர் பரம்சிவன், 35 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. விசாரணை நடத்திய சி.பி.ஐ அதிகாரிகள், 5 லட்ச ரூபாய் லஞ்சம் பெற முயன்றதாக பரமசிவனின் உறவினர் சிவராம் திலகரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், பரமசிவனுக்கு 4 ஆண்டு கடுங்காவல் சிறையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பரமசிவனின் உறவினர் சிவராம் திலகருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments