தனியார் தொழிற்சாலை பெண் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை... போலீசார் தீவிர விசாரணை!

0 3561

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் தொழிற்சாலை பெண் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழக காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள காவலன் செயலியில் வேலூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், இரு தினங்களுக்கு முன்பு பணிமுடித்து ஆண் நண்பருடன் சென்று கொண்டிருந்த தன்னை, பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் இருவர், கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பதிவான சிசிடிவி காட்சிகளை சேகரித்து, சந்தேகத்தின்பேரில் 2 இளைஞர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments