அதிகாரிகளை அவமதித்ததற்காக இஸ்தான்புல் மேயருக்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை!

0 1138

அதிகாரிகளை அவமதித்ததற்காக  இஸ்தான்புல் நகர மேயருக்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் துருக்கி அதிபர் எர்டோகனின் போட்டியாளராகக் கருதப்படும் எக்ரெம் இமாமோக்லு போட்டியிட இருந்த நிலையில் நீதிமன்றம் அரசியல் தடை விதித்துள்ளது. 

பிரதான எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியை சேர்ந்த பிரபலமான இமாமோக்லு, அதிபர் எர்டோகனின் முக்கிய போட்டியாளராகப் பார்க்கப்படுகிறார். அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு சுமார் ஆறு மாதங்கள் உள்ள நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments