உயர்நீதிமன்ற வளாகத்தை டிரோன் மூலம் படம் பிடித்த பிச்கைக்காரன்-2 படக்குழுவினர் 3 பேர் கைது..!
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தை டிரோன் கேமிரா மூலம் படம் பிடித்த பிச்சைக்காரன்-2 படக்குழுவினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பார்கவுன்சில் வளாகங்களை சிலர் டிரோன் கேமிரா மூலம் படம்பிடிப்பதாக கிடைத்த தகவலின் பேரில்.
அங்கு சென்ற போலீசார், 3 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் விஜய் ஆண்டனி நடித்து இயக்கும் பிச்சைக்காரன் 2 படத்தின் படக்குழுவினர் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் அரசுக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி படப்பிடிப்பை நடத்தியதாகக் கூறி, படக்குழுவினர் நவீன் குமார், சுரேஷ், ரூபேஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீசார், டிரோன் கேமிராக்களை பறிமுதல் செய்து, பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.
Comments