வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு,1000க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது..!

0 2141

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாமல், கீழம்பி உள்ளிட்ட ஏரிகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 1000க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நேரடியாக இப்பகுதிகளுக்கு சென்று, பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு முகாம்களுக்கு
அனுப்பி வைத்தார்.

வேகவதி ஆற்றின் குறுக்கே உள்ள 4 தரைப்பாலங்கள் சேதமடைந்துள்ள நிலையில், ஒரு தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் இந்த 5 தரைப்பாலங்களில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு, போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments