செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக இன்று வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறப்பு..!

0 2069

காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு இரண்டாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

தொடர் மழையால், செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக இன்று காலை ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

ஏரியின் மொத்த கொள்ளளவான 24 அடியில், 22 புள்ளி 65 அடி நீர் நிரம்பியதையடுத்து, நண்பகலில் கூடுதலாக ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அடையாறு கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments