நிதிஷ்குமார் மீதான மக்களின் கோபத்தின் பிரதிபலிப்பே இடைத்தேர்தல் முடிவு - பிரசாந்த் கிஷோர்

0 1957

பீகாரின், குர்ஹானி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஒருங்கிணைந்த ஜனதா தளக்கட்சியின் தோல்வி, முதலமைச்சர் நிதிஷ்குமார் மீதான பொதுமக்களின் கோபத்தின் பிரதிபலிப்பு என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தனது சுயராஜ்ய பிரச்சாரத்தின் ஒருபகுதியாக, பீகாரில் 3,500 கிலோமீட்டர் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் பிரசாந்த் கிஷோர், நிதிஷ்-லாலு கூட்டணி ஆட்சியின் செயல்பாடுகள் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என தெரிவித்தார். மேலும், பெரும் ஊழலால் மக்கள் சலிப்படைந்துள்ளதாக கூறிய அவர், குர்ஹானி தேர்தல் முடிவு மக்கள் கோபத்தின் பிரதிபலிப்பு என குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments