ரயில் நிலையத்தில் நடைபாதைக்கும் - தண்டவாளத்திற்கும் இடையில் சிக்கி நூலிழையில் உயிர் பிழைத்த 2 பயணிகள்!

0 2479

கர்நாடக மாநிலம் கலபுரகி ரயில் நிலையத்தில், நடைபாதைக்கும் - தண்டவாளத்திற்கும் இடையில் சிக்கி நூலிழையில் இரு பயணிகள் உயிர் பிழைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

சம்பவத்தன்று, பெண் உட்பட இரு பயணியர் நடைமேடையிலிருந்து கீழே இறங்கி, தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது, சரக்கு ரயில் ஒன்று வந்தது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட இருவரும் நடைமேடைக்கும், தண்டவாளத்துக்கும் இடையில் உள்ள இடைவெளியில் படுத்து கொண்டனர்.

ரயில் கடந்த பின், இருவரையும் அங்கிருந்த மற்ற பயணியர் மேலே தூக்கி காப்பாற்றினர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments