கண்டெய்னர் லாரி மீது டாடா ஏஸ் வாகனம் மோதி விபத்து.. 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழப்பு!

0 2444

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கண்டெய்னர் லாரி மற்றும் டாடா ஏஸ் வாகனம் மோதிக் கொண்ட விபத்தில்  சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிபுரம் என்ற இடத்தில் சென்ற  டாட்டா ஏசி வாகனத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இந்த வாகனத்திற்கு முன்பு சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி திடீரென பிரேக் பிடித்ததால் பின்னால் சென்ற டாட்டா ஏசி வாகனம் அதன் மீது மோதியது. 

இதனை தொடர்ந்து பின்னால் வந்த ஈச்சர் வாகனமும் டாட்டா ஏசி வாகனத்தின் மீது மோதியதில் அந்த வாகனம் கண்டெய்னர் லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments