பேக்கரியில் கெட்டுப்போன இனிப்பு வகைகள் விற்பனை.. அதை உட்கொண்ட குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்..!

0 1871

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள பேக்கரியில் கெட்டுப்போன இனிப்பு வகைகளை விற்பனை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

அந்த பேக்கரியில் ஆட்டோ ஓட்டுனர் கணேஷ் வாங்கிச்சென்ற இனிப்பை உட்கொண்ட அவரது குழந்தைக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், அதே பேக்கரியில் இனிப்பு வாங்கிய மற்றொரு ஆட்டோ ஓட்டுனருக்கும் வயிற்று வலி ஏற்பட்டதால், இருவரும் கடைக்குச்சென்று கேள்வி எழுப்பினர்.

அப்போது, மீண்டும் கெட்டுப்போன இனிப்பே திரும்ப வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், உரிமையாளரிடம் கேட்டதற்கு தவறு நடந்துவிட்டது என்றும்,இந்த ஒரு முறை மன்னித்துக் கொள்ளுங்கள் எனவும் கூறினார்.

ஆனால் கடையில் இருந்த மற்றொரு நபரோ மெத்தனமாக பதிலளித்ததால், உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments