துறையூர் கிராமத்தில் இரு பிரிவினரிடையே மோதல்.. பாதுகாப்புக்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!

0 1445

கடலூர் அருகே துறையூர் கிராமத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 5ந் தேதியன்று அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் இருதரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு, சண்டையிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கிராமத்தில் இரு பிரிவினர்களிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரைக்கொருவர் கற்கள், கட்டைகளால் தாக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து சென்ற விருத்தாசலம் போலீஸார் மீதும் கற்கள் வீசப்பட்டதில், 4 போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க லேசான தடியடி நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments