தனியார் சொகுசு விடுதியை கற்காளால் தாக்கிய அதன் முன்னாள் குத்தகைதாரர் கைது

0 1803

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியை கற்காளால் தாக்கிய அதன் முன்னாள் குத்தகைதாரரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

பிரான்சில் வசித்து வரும் பிரான்சிஸ் என்பவருக்கு சொந்தமான சொகுசு விடுதியை, வில்லியனூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணா என்பவர் லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

நேற்று மலை விடுதிக்குள் புகுந்த நபர் ஒருவர் அங்கிருந்த பொருட்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.

விசாரணையில் அவர் பெங்களூரை சேர்ந்த ரூபன் பெர்ணான்டஸ் என்பதும், அவர் இவ்விடுதியை லீசுக்கு எடுத்து நடத்தி வந்த முன்னாள் உரிமையாளர் என்பதும் தெரிய வந்தது.

விடுதி வேறொருவருக்கு கைமாறிய பின் விடுதியில் உள்ள அவருக்கு சொந்தமான மெத்தை உள்ளிட்ட பொருட்களை திருப்பி தராததால் அவர் தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments