அல்லிகுளம் பகுதியில் இரும்பு வியாபாரி வெட்டிப் படுகொலை.. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை!

0 2684

சென்னை பெரியமேடு அருகே இரும்பு வியாபாரி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். மூர் மார்க்கெட் சாலையில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்த, முனிசாமிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் அவரது நண்பர்கள் அல்லிக்குளம் நீதிமன்ற வளாகத்தின் அருகே அழைத்துச் சென்று, அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த பெரியமேடு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக நண்பர்களே வெட்டிக் கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments