அரசு முத்திரையுடன் போலி அரசு சான்றிதழ் அச்சடித்து விற்பனை செய்த இருவர் கைது!

0 1697

சென்னை அடுத்த அம்பத்தூரில் அரசு முத்திரையுடன் போலி சான்றிதழ் அச்சடித்து விற்பனை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் போலி பட்டாக்கள், பள்ளி மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்டவற்றை போலியாக அச்சடித்து விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின்பேரில், அம்பத்தூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், சோழபுரம் பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார், போலி அரசு சான்றிதழ்களை புழக்கத்தில் விட முயன்ற பிணு மற்றும் ஒரகடத்தைச் சேர்ந்த வின்சென்ட் ஆகியோரை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments