டெல்லி மாநகராட்சித் தேர்தல்: 250 கவுன்சிலர்களைத் தேர்ந்தெடுக்க சுமார் 1.45 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு!

0 1453

டெல்லி மாநகராட்சித் தேர்தலில் இன்று 250 கவுன்சிலர்களைத் தேர்ந்தெடுக்க சுமார் ஒன்றரைக் கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். பாஜக ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தொகுதி மறுசீரமைப்பு நடைபெற்று மூன்று உள்ளாட்சிகள் கடந்த மே மாதம் ஒன்றாக இணைக்கப்பட்டதையடுத்து நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.

2007 முதலே மாநகராட்சியைக் கைப்பற்றிய பாஜக மீண்டும் இந்த முறை வெற்றியை எதிர்பார்த்து இருக்கிறது. டெல்லியில் குவியும் குப்பைகள், காற்றுமாசு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளை முன்வைத்து இத்தேர்தல் நடைபெறுகிறது.இன்று பதிவாகும் வாக்குகள் ஏழாம் தேதி எண்ணப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments