32 சிம் கார்டுகள் ,28 ஆண்கள்.. அதில், ஒரு போலீஸ்காரரும் அடக்கம்.. டீ குடிப்பது போல கல்யாணம் செய்த அபிநயா

0 7314

நான்காவது முறையாக திருமணம் செய்து 30 நாளில் நகை பணத்துடன் தலைமறைவாகி இரண்டாவது கணவனுடன் கைது செய்யப்பட்ட கல்யாண ராணி அபிநயாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

32 சிம்கார்டுகளை பயன்படுத்தி வந்த அபிநயா, சமூக ஊடகங்கள் மூலமாக சுமார் 28 ஆண்களுக்கு காதல்வலை வீசியுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் காவல்துறையை சேர்ந்த ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாகவும் அபிநயா வாக்குறுதி அளித்துள்ளதும், தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

2011ஆம் ஆண்டே முதல் திருமணம் செய்த அபிநயா 2013ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

இரண்டாவது கணவரான செந்தில்குமாருடன் குடும்பம் நடத்திக்கொண்டே மூன்றாவதாக ஆட்டோ டிரைவர் ஒருவரையும் திருமணம் செய்து இரண்டு பேரையும் பிரிந்த நிலையில் நான்காவதாக நாகராஜை திருமணம் செய்துள்ளார்.

நான்காவது கணவர் புகாரின் பேரில் அபிநயா கைது செய்யப்படுவதற்கு முன்பு அவரைப்பற்றி எந்த புகாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments