மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு சிபிஐ நோட்டீஸ்..!

0 1784

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

எத்தகைய விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார் என்று தெலுங்கானா ராஷ்ட்ர சமிதிக் கட்சியின் மேலவை உறுப்பினரான கவிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஹைதராபாதில் உள்ள தமது இல்லத்தில் டிசம்பர் 6ம் தேதி வந்து விசாரணையை மேற்கொள்ளலாம் என்றும் அவர் சிபிஐக்கு பதில் அளித்துள்ளார்.

ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கையில் தனியார் சிலர் ஆதாயம் பெற்றதாக புகார் எழுந்தது. 

இது தொடர்பாக டெல்லி, (பஞ்சாப்,) ஹைதராபாத் உள்ளிட்ட 35 இடங்களில் கடந்த அக்டோபர் மாதத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments