அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மட்டுமே குறி... 200 க்கும் அதிகமான செல்போன்களை திருடிய கொள்ளையன்..!

0 1609

சென்னையில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை மட்டுமே குறிவைத்து 5 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்களை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 2 மருத்துவர்கள், ஒரு செவிலியரின் செல்போன்கள் காணாமல் போன நிலையில், சிசிடிவி பதிவைக் கொண்டு வியாசர்பாடியைச் சேர்ந்த முணியாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன் சொத்துத் தகராறில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முனியாண்டிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சையின் போது ஒரு கையின் மணிக்கட்டு வரை அகற்றி அவரை காப்பாற்றியுள்ளனர்.

இதனால் தான் ஊனமானதால் மருத்துவர்களை தனக்கு பிடிக்காது எனவும் பொதுமக்களின் செல்போன்களில் கை வைக்க மாட்டேன் எனவும் முணியாண்டி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments