கண்டெய்னரில் ரகசிய அறை அமைத்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தல்..!

0 1638

மினிலாரியின் கண்டெய்னரின் உள்ளே ரகசியமாக அறை அமைத்து 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான 574 கிலோ குட்கா கடத்தியதாக கரூரைச் சேர்ந்தவரை தென்காசி மாவட்ட போலீஸார் கைது செய்தனர்.

ரகசிய தகவலின் பேரில் வீரவநல்லூர் போலீஸார் காருகுறிச்சியில் வாகன சோதனை நடத்தியபோது, ஒரு மினிலாரியை சோதனையிட்ட போது கண்டெய்னரின் உள்பகுதியில் எந்த வித்தியாசமும் தெரியாத அளவிற்கு ரகசியமாக ஒரு அறை அமைத்து அதில் குட்கா பண்டல்களை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். 

இதனையடுத்து, லாரியை ஓட்டி வந்த கரூரைச் சேர்ந்த சிவக்குமாரை கைது செய்ததோடு,  லாரியையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments