விமான பயணிகளுக்கு "டிஜியாத்ரா" செயலி.. டெல்லியில் அறிமுகப்படுத்தினார் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

0 1930

விமான பயணத்தை எளிதாக்கும் வகையில் மத்திய அரசால் டிஜியாத்ரா என்ற முக அடையாளத்தைக் கொண்டு பயணிகளை அனுமதிக்கும் திட்டத்தை டெல்லி விமான நிலையத்தில் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிமுகப்படுத்தினார்.

பெங்களூரூ, வாரணாசி விமான நிலையங்களிலும் விரைவில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர், இச்சேவையைப் பயன்படுத்த, ஆதார் அடிப்படையிலான விபரங்களை டிஜியாத்ரா செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றார்.

காகித பயன்பாட்டை குறைக்கவும், பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் சிந்தியா கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments