பெற்றோரை ஏமாற்றி வெளியூர் சென்ற கல்லூரி மாணவிகள்.. தனியார் விடுதியில் இருந்த 2 மாணவிகளும் மீட்பு!

0 2276

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் படித்து வந்த மாணவிகள் இருவர் மாயமான நிலையில், மதுரை தனியார் விடுதி ஒன்றில் போலீசாரால் மீடகப்பட்டனர்.

பண்டாரபுரம்  மற்றும் கொழுந்தட்டு பகுதியை சேர்ந்த மாணவிகள் கார்த்திகா, எப்சிபா.  இணை பிரியா தோழிகளான இருவரும் தேர்வுக்காக வழங்கப்பட்ட 10 நாட்களும் பிரிந்து இருக்க முடியாது என முடிவு செய்தனர்.

இதையடுத்து தேர்வுக்கட்டணம் கட்ட, வங்கிக்கு செல்வதாக கூறி, பெற்றோரை ஏமாற்றிவிட்டு, வெளியூர் புறப்பட்டு சென்றுள்ளனர். மாணவிகள் மாயமானது குறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில் தனிப்படை போலீசார், மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் தேடிவந்தனர்.

இந்நிலையில் மாணவிகளின் செல்பேசி கோபுர இணைப்பு சிக்னலை வைத்து, மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் விடுதியில் அவர்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments