கோடியக்கரை கடற்கரையில் படகை பறிமுதல் செய்ய சென்ற அதிகாரிகளுக்கும் மீனவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு..!

0 2098

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் படகை பறிமுதல் செய்ய சென்ற அதிகாரிகளுக்கும் மீனவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பாம்பனில் இருந்து கடலில் ஒரு பெரிய படகு மீன்பிடித்துக் கொண்டு கோடியக்கரை அருகே பழுதாகி நின்றதாக கூறப்படுகிறது.அந்தப் படகை பறிமுதல் செய்வதற்காக வேதாரண்யம் மீன்வளத்துறை அதிகாரிகள், கடலோர போலீசார் சென்ற போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளானது.

இது குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும டி.எஸ்.பியிடம் மீன்வளத்துறை ஆய்வாளர் நடேசராஜா மற்றும் கோடியக்கரை மீனவ நல உரிமைசங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments