இந்தியாவின் முதல் தனியார் ஏவுதளத்தை அமைக்கும் அக்னிகுல் காஸ்மோஸ்.. ஆண்டு இறுதிக்குள் ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டம்..!
இந்தியாவில் தனியாரால் உருவாக்கப்பட்ட முதல் ராக்கெட் ஏவுதளத்தை விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் திறந்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள, இஸ்ரோவின் ஏவுதள வசதிகளைப் போலவே, ஏவுதளமும் அக்னிகுல் ஏவுதளம் மற்றும் அக்னிகுல் மிஷன் கட்டுப்பாட்டு மையம் என 2 பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதனை இஸ்ரோ தலைவர் சோம்நாத் திறந்து வைத்தார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவுதளத்தில் இருந்து தனது தனிப் பயனாக்கக்கூடிய அக்னிபான் ராக்கெட்டை விண்ணில் செலுத்த அக்னிகுல் காஸ்மோஸ் திட்டமிட்டுள்ளது.
Comments