குறைவான நேரம் திறக்கப்பட்டாலும் மது விற்பனையில் தமிழகம் முன்னிலை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்..!

0 2030

பிற மாநிலங்களை விட குறைவான நேரம் திறக்கப்பட்டாலும் மது விற்பனையில் தமிழகமே முன்னிலையில் உள்ளதாக தெரிவித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை மாற்ற ஏன் பரிசீலிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்க தடை விதிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. அதன் விசாரணையில், அளவு குறைவாகவும், விலை அதிகமாகவும் நிர்ணயிப்பதால் அதிகம் மது விற்பனையாவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பதை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments