வெளிநாட்டு சாக்லேட் சாப்பிட்ட 8வயது சிறுவன் உயிரிழப்பு..!

0 2213

தெலுங்கானா மாநிலத்தில் வெளிநாட்டு சாக்லேட் சாப்பிட்ட 8 வயது சிறுவன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான்.

ராஜஸ்தானைச் சேர்ந்த கங்கன் சிங் என்பவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வாரங்கலுக்கு குடிபெயர்ந்து மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று திரும்பிய கங்கன்சிங் தனது குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கி கொண்டு வந்திருந்தார். 2ஆம் வகுப்பு படிக்கும் அவருடைய 2வது மகன் சந்தீப் சாக்லேட்டுகளை பள்ளிக்கு எடுத்து சென்று சாப்பிட்டான்.

அதனை சாப்பிட்ட போது தொண்டையில் சிக்கி கொண்டதால் சந்தீப்புக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தும் சந்தீப் பலனின்றி உயிரிழந்தான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments